by admin on | 2026-08-15 02:19 PM
80-ஆவது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப,அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, 160 பயனாளிகளுக்கு ரூ.2.30 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் / பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (15.08.2026) நடைபெற்ற 80-ஆவது சுதந்திர தினவிழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநான், இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் மொழிபோர் தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து பரிசுப்பொருட்களை வழங்கி, பயனாளிகளுக்கு அரசுநலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணியாற்றிய காவலர்கள், அரசு அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கே.எஸ்.பிரவீன் கௌதம் இ.கா.ப., அவர்கள் முன்னிலை வகித்தார்.
மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய 16 நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு கேடயங்களையும், சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை, நீதித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த மொத்தம் 269 அலுவலர்கள் / பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.17,562/- மதிப்பிலான விலையில்லா தேய்ப்புப் பெட்டிகளையும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.6,00,000/- மதிப்பீட்டில் மீன் விற்பனை அங்காடி அமைப்பதற்கான ஆணையினையும், தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.31,750/- கல்வி உதவித்தொகை மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.35,00,000/- மதிப்பிலான முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.1.30.000/- இயற்கை மரண உதவித்தொகைகளையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 24 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.24,00,000/- வங்கி கடனுதவிகளும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 110 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,62,00,000/- வங்கி கடனுதவிகளும், இயற்கை மரண உதவித்தொகைகளையும்,
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.18,000/- மதிப்பிலான அட்மா திட்டம் கைமுறை விதை விதைப்பான் மற்றும் அட்மா திட்டம் மின்கல விசை தெளிப்பானையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் பிரதம மந்திரியின் ராஷ்டிரிய கிரிஷி விகாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.90,000/- மதிப்பீட்டில் நிரந்தர காய்கறி கல்தூண் பந்தல் அமைப்பதற்கான ஆணையினையும், வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 1 பயனாளிகளுக்கு ரூ.3,200/- மதிப்பீட்டில் மரக்கன்றுகளையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.13,380/- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.15,000/- மதிப்பிலான சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு விலையில்லா தையல் இயந்திரங்களையும் என மொத்தம் 160 பயனாளிகளுக்கு ரூ.2,30,18,892/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.