by yoga on | 2025-01-17 07:29 PM
விஜய்
பரந்தூர் செல்ல நடிகர் விஜய் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க 5100 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் 3 ஆண்டுகளை கடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்ட களத்தில் இருக்கும் மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் முடிவு செய்துள்ளார். அங்கு சென்று மக்களை சந்திக்கும் வகையில் அதற்கான அனுமதி கோரி தமிழக டி.ஜி.பி., காஞ்சிபுரம் எஸ்.பி., ஆகியோரிடம் உரிய முறையில் த.வெ.க., நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். ஆனால், மனு மீது எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!