by yoga on | 2025-01-17 07:29 PM
விஜய்
பரந்தூர் செல்ல நடிகர் விஜய் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க 5100 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் 3 ஆண்டுகளை கடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்ட களத்தில் இருக்கும் மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் முடிவு செய்துள்ளார். அங்கு சென்று மக்களை சந்திக்கும் வகையில் அதற்கான அனுமதி கோரி தமிழக டி.ஜி.பி., காஞ்சிபுரம் எஸ்.பி., ஆகியோரிடம் உரிய முறையில் த.வெ.க., நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். ஆனால், மனு மீது எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.