| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

தேர்தல் எதிரொலி...! கூட்டங்கள் ரத்து...! வேண்டுகோள்...! முக்கிய அறிவிப்பு...!

by Vignesh Perumal on | 2026-03-17 11:24 AM

Share:


தேர்தல் எதிரொலி...! கூட்டங்கள் ரத்து...! வேண்டுகோள்...! முக்கிய அறிவிப்பு...!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள்தோறும் நடைபெறும் ‘மக்கள் குறை தீர்க்கும் நாள்’ கூட்டங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் தொடர்பான பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, பொதுமக்களின் புகார்களைப் பெற்று நேரடியாக விசாரணை நடத்தும் ‘மக்கள் குறை தீர்க்கும் நாள்’ கூட்டம் வரும் மே 4-ஆம் தேதி (04.05.2026) வரை நடைபெறாது என மக்கள் குறைதீர்க்கும் பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி கூட்டம் நடைபெறாது என்றாலும், பொதுமக்களின் குறைகளைத் தெரிவிப்பதில் தேக்க நிலை ஏற்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் பிரிவு அலுவலகங்களின் வாசலில் பிரத்யேகமாக ‘மனுப் பெட்டிகள்’ வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை நேரடியாக அதிகாரிகளிடம் வழங்க இயலாது என்பதால், அங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட்டுச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பெட்டியில் சேகரிக்கப்படும் மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உரிய விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் முடிவடைந்த பின்னர், வழக்கம்போல் திங்கள்தோறும் நடைபெறும் நேரடி குறை தீர்க்கும் கூட்டங்கள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் இந்த அறிவிப்பைக் கருத்தில் கொண்டு, அலுவலகங்களுக்கு நேரில் வந்து காத்திருப்பதைத் தவிர்த்து, மனுப் பெட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.











நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment