by admin on | 2026-08-07 05:48 PM
வருசநாடு – மேகமலை சுற்றுவட்டார மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கை: தேனி மாவட்ட ஆட்சியருடன் நடத்திய பேச்சுவார்த்தை மனநிறைவாக இருந்தது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் தேனியில் பேட்டி
வருசநாடு – மேகமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்பாக, தேனி மாவட்ட ஆட்சியருடன் நடத்திய பேச்சுவார்த்தை மனநிறைவாக இருந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் தெரிவித்தார்.
தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மலை கிராம மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களது நீண்டகால குடியிருப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் எடுத்துரைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியருடனான பேச்சுவார்த்தை சுமூகமாகவும், மனநிறைவளிக்கும் வகையிலும் நடைபெற்றதாகவும், மலை கிராம மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் பி. சண்முகம் தெரிவித்தார்.
மேகமலை வன சரணாலயம் மலைவாழ் மக்கள் குறித்து CPM மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டி...???
உலக தாய்ப்பால் வார விழா பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்.....!!!
மேகமலை மலை கிராம மக்கள் தேனி கலெக்டர் அலுவலகம் முற்றுகை...!!! போராட்டம் தீவிரம்....!!!"
தேனி கலெக்டர் வைத்தியநாதன் ஆய்வு....!!!!!
, பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்....