by admin on | 2026-07-23 03:54 PM
இளைய தலைமுறை மக்கள் நல பாதுகாப்பு இயக்கம் தொடக்க விழா – தேனியில் இன்று எழுச்சியுடன் கோலாகலத் தொடக்கம்! [23.07.2026]
இடம்: இன்டர்நேஷனல் ஹோட்டல் தேனி
சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராகச் சமரசமின்றிக் குரல் கொடுக்கவும் "இளைய தலைமுறை மக்கள் நல பாதுகாப்பு சங்கம் மற்றும் இயக்கம்" இன்று தேனியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது
கடந்த 14 ஆண்டுகளாக "இளைய தலைமுறை" அறக்கட்டளையின் மூலம் பல்வேறு சமூக நலப் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வந்ததன் அடுத்த கட்ட நகர்வாக இந்த இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடக்க விழாவிற்கு இயக்கத்தின் தலைவர் M.K.மருத துரை அவர்கள் தலைமை வகித்தும் துணை தலைவர் V.பாலச்சந்திரன் மற்றும் பொதுச் செயலாளர்,S.முருகானந்தம் அவர்கள் முன்னிலை வகித்தும், துணைப் பொதுச் செயலாளர், K.விமல்குமார், பொருளாளர்கள் K.ஜீவநாத், B.சக்தி, இணை பொது செயலாளர்கள் R.சக்திவேல், C.சத்தீஸ்வரன்,M.K.வேல்முருகன்,V.வேல்முருகன், தலைமை ஒருங்கிணைப்பாளர் திருப்பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இயக்கத்தின் முக்கியக் கொள்கைகள் மற்றும் முழக்கம்:வீரம்,விவேகம்,வெற்றி என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்த இயக்கம் செயல்படும்.முக்கியப் பணிகள்: இயற்கை வள பாதுகாப்பு, பத்திரிகையாளர் பாதுகாப்பு, வணிகர் நலன் மற்றும் பாதுகாப்பு, லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டம், பெண்கள் பாதுகாப்பு,போதை ஒழிப்பு,அரசு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு,தொழிற் வாய்ப்பு குறித்து வழிகாட்டுதல் ஆகியவை இக்கூட்டத்தின் மூலமாகப் பிரகடனப்படுத்தப்பட்டன.பல்வேறு சிறப்புப் பிரிவுகள்:இளைஞர்களை முழுமையாக ஈடுபடுத்தி, சமுதாயத்தின் அனைத்துத் துறைகளுக்கும் அரணாகத் திகழும் வகையில் அரசியல் மற்றும் கொள்கைப் பரப்புரைப் பிரிவு, பத்திரிகையாளர் மற்றும் ஊடகப் பாதுகாப்புப் பிரிவு, வணிகர் நலப்பிரிவு, லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புப் பிரிவு, சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு உள்பட 26 சிறப்புப் பிரிவுகள் இந்த இயக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன.நிகழ்ச்சியின் இறுதியில் புதிதாகப் பொறுப்பேற்ற மாநில, மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான நிர்வாகிகளுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டு, சமுதாய நலனுக்காகத் தொடர்ந்து களப்பணியற்றுவோம் என உறுதியேற்கப்பட்டது.தங்களது ஊடகத்தின் வாயிலாக இந்தச் செய்தியை வெளியிடுவதோடு, மக்கள் நலன் காக்கும் எங்களது மாபெரும் முயற்சிக்குத் தங்களின் ஊடக ஆதரவைத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
M.K.மருத துரை தலைவர்,
இளைய தலைமுறை மக்கள் நல பாதுகாப்பு சங்கம் & இயக்கம்,
தேனி மாவட்டம்.தொடர்புக்கு:9944857556
இளைய தலை முறை மக்கள் நல பாதுகாப்பு இயக்கம் துவக்கம்...!!!
போலீஸ் அதிகாரியாக அன்று - அரசு பள்ளி ஆசிரியராக இன்று ! சீமா அகர்வாலின் சேவை !!
பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்....!!!!
திண்டுக்கல்லில் 8 பேர் அதிரடி கைது...! ரூ. 1,10,000 ரொக்கம் பறிமுதல்...!
விவசாயிகள் வண்டல் மண் அள்ளிச் செல்ல பாதை அமைத்துக் கொடுப்பது பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பொறுப்பு.....!!!!