by admin on | 2026-08-05 11:27 AM
தமிழக பத்திரிக்கையாளர் சங்கத்தின் கண்டன அறிக்கை
தஞ்சாவூரில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவத்தின்போது செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தமிழக பத்திரிக்கையாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறையினர், பொதுமக்களுக்கு உண்மையான தகவல்களை கொண்டு சேர்க்கும் உயரிய பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கடமையை நிறைவேற்றிக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது ஊடகச் சுதந்திரத்திற்கும், ஜனநாயக மாண்புகளுக்கும் எதிரான செயலாகும்.
எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பத்திரிக்கையாளர்களை அச்சுறுத்தவோ, தாக்கவோ யாருக்கும் அதிகாரமோ உரிமையோ இல்லை. இந்தத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், செய்தி சேகரிக்கும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். பத்திரிக்கையாளர்கள் மீதான வன்முறைகளை தமிழக பத்திரிக்கையாளர் சங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதையும், பாதிக்கப்பட்ட நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளருக்கு எங்களது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ப. ஹரிஹரன்
தலைவர்
தமிழக பத்திரிக்கையாளர் சங்கம்
ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளின் இல்லங்களில் மரக்கன்றுகள் நடவு....!!!!
திருப்பூர் கோபுரம் பவுண்டேஷன் அறக்கட்டளையின் சேவையை பாராட்டி கலெக்டர் நற்சான்று....!!!
தமிழ்நாடு ரோல் பால் ஸ்கேட்டிங் ஜூனியர் போட்டி திருச்சியில் துவங்கியது....!!!
தேனியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்....!!!"
சிவகங்கை கலெக்டர் தலைமையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்...!!! நலத்திட்ட உதவிகள் வழங்கல்...!!!