by satheesh on | 2026-08-02 09:27 PM
*பெண்ணை கொலை செய்து எரித்த வழக்கில் தந்தை மகன் கைது.*
கோவை பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே பெண்ணை கொலை செய்து உடலை எரித்த வழக்கில் தந்தை மகனை போலீஸார் கைது செய்தனர். கிணத்துக்கடவு அடுத்த சென்றாம்பாளையம் பிரிவு அருகே உள்ள தனியார் தொழிற்சாலையின் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது. இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப் பதிவு செய்து பெண்னை கொலை செய்து எரித்தது யார் என்பதை கண்டறிய தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், கிணத்துக்கடவு கோவை சாலையில் உள்ள பல்வேறு பகுதியில் அமைக்கப்பட்ட 120 கண்காணிப்பு கேமராக்கள் பதிவான காட்சியை வைத்து விசாரணை மேற்கொண்டதில், பொள்ளாச்சியை சேர்ந்த பழனிமுத்து என தெரியவந்தது. இதனை அடுத்து பழனி முத்துவை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில், பொள்ளாச்சி ஜமீன் கோட்டாம்பட்டியை சேர்ந்த சங்கீதாவிற்கும், பழனிமுத்துவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக திருமணத்துக்கு மீறிய உறவு இருந்துள்ளது. இருவரும் கிணத்துக்கடவு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்ததாகவும், சங்கீதாவுக்கும் பழனிமுத்துவுக்கும் ஏற்பட்ட தகராறில் பழனிமுத்து ஆத்திரத்தில் சங்கீதாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு பழனிமுத்துவின் தந்தை குருநாதன் உதவியுடன் சங்கீதாவின் உடலை சென்றாம் பாளையம் பிரிவில் உள்ள காட்டுப் பகுதியில் வைத்து எரித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பழனிமுத்து(35) மற்றும் அவரது தந்தை குருநாதன்(60) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதலியில் கொலைக்கு தந்தையே உடந்தையாக இருந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இணை ஆசிரியர்: N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!