by admin on | 2026-08-06 08:34 AM
தேனி மாவட்டம் வடுகபட்டி பேரூராட்சியில் நேற்று (05.08.2026) பேரூராட்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செ
Copy Edit Search வடுகபட்டி பேறாராடபாயா ரூபாய த்தலைவர் அவர்கள், இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் அறிவுசார் மையக் கட்டிடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பணிகளை காலதாமதமின்றி திட்டமிட்ட காலத்திற்குள் அறிவுறுத்தினார். முடித்திட அலுவலர்களுக்கு
அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு வழங்கிவந்த மதிய உணவை பார்வையிட்டு, நாள்தோறும் சுகாதாரமான முறையில் உணவு வழங்கிடப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
பின்னர், வடுகபட்டி பேரூராட்சிக்கு வைகை அணையிலிருந்து குடிநீர் வழங்கிட மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை பார்வையிட்டதுடன் 3 இலட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், வடுகபட்டியில் உள்ள கவிஞர் கண்ணதாசன் நூலகத்திற்கு சென்று பார்வையிட்டு தினசரி வாசகர்களின் வருகை குறித்து கேட்டறிந்ததுடன், தேவையான அளவு புத்தகங்களை வைத்து பராமரித்திடவும், வாசகர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை நல்ல முறையில் பராமரித்திடவும் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.வில்லியம் ஜேசுதாஸ், உதவி செயற்பொறியாளர் திருமதி அம்சா உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
தேனி கலெக்டர் வைத்தியநாதன் ஆய்வு....!!!!!
, பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்....
கள்ளக்காதல் - பெண் எரித்துக் கொலை ! தந்தை மகன் கைது !!
பஸ்ஸில் மனைவி மகளுக்கு சரமாரி அரிவாள் வெட்டு ! கணவர் கைது !!
'எய்ம் ஃபார் சேவா'வின் 'தயானந்த கிருபா கேர்' பராமரிப்பு நிதி திரட்ட, சென்னையில் 'ராதா - பக்தியின் உருவகம்' பரதநாட்டிய நிகழ்ச்சி