by admin on | 2026-07-23 11:23 AM
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில்
பணி புரியும் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் .
ஆண்டிபட்டி வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆண் பெண் ஆசிரியர்கள் பங்கேற்பு
டெட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
ஆண்டிபட்டி வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர முருகானந்தம் தலைமை தாங்கினார் . மாவட்டச் செயலாள் சரவணமுத்து நிறைவுரையாற்றினார். .
ஆர்ப்பாட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும்
டெட் தேர்வை ரத்து செய்யும் சட்ட திருத்தத்தை வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தில் மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும்
மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழக அரசு டெட் தேர்வை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்
என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் கோஷங்களை எழுப்பினார்கள் .
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஆண் பெண் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளின் இல்லங்களில் மரக்கன்றுகள் நடவு....!!!!
திருப்பூர் கோபுரம் பவுண்டேஷன் அறக்கட்டளையின் சேவையை பாராட்டி கலெக்டர் நற்சான்று....!!!
தமிழ்நாடு ரோல் பால் ஸ்கேட்டிங் ஜூனியர் போட்டி திருச்சியில் துவங்கியது....!!!
தேனியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்....!!!"
சிவகங்கை கலெக்டர் தலைமையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்...!!! நலத்திட்ட உதவிகள் வழங்கல்...!!!