by satheesh on | 2026-08-02 07:24 PM
தேனி,தேவாரத்தை சேர்ந்த மணிக்குமார்(39)இவர் மனைவி சந்திரகலா(37) குடும்பப்பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர் .நேற்று இரவு திருப்பூரில் இருந்து சந்திரகலா தனது மகள் சஞ்சனாஸ்ரீ(13) உடன் தேவாரத்திற்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.. வத்தலகுண்டு காளியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்ற போது மறைந்து இருந்த மணிக்குமார் பேருந்தில் ஏறி அரிவாளால் சந்திரகலா மற்றும் மகள் சஞ்சனா ஸ்ரீ ஆகியோரை சரமாரியாக வெட்டினார். படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்படி சம்பவம் குறித்து வத்தலகுண்டு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முனியாண்டி தலைமையிலான போலீசார் மணிக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இணை ஆசிரியர்: N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கள்ளக்காதல் - பெண் எரித்துக் கொலை ! தந்தை மகன் கைது !!
பஸ்ஸில் மனைவி மகளுக்கு சரமாரி அரிவாள் வெட்டு ! கணவர் கைது !!
'எய்ம் ஃபார் சேவா'வின் 'தயானந்த கிருபா கேர்' பராமரிப்பு நிதி திரட்ட, சென்னையில் 'ராதா - பக்தியின் உருவகம்' பரதநாட்டிய நிகழ்ச்சி
கொடைக்கானல் அருகே அழுகிய நிலையில் சடலம் மீட்பு...! மோதலில் உயிரிழந்தது உடற்கூறாய்வில் அம்பலம்...!
திருப்பதி தேவஸ்தானம்...! போலி இணையதளம்...! அவசர எச்சரிக்கை...! யாரும் நம்பவேண்டாம்...!