by Vignesh Perumal on | 2026-03-18 02:28 PM
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேரை வேடசந்தூர் டி.எஸ்.பி தனிப்படையினர் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 700 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதாலும், பொது அமைதியைப் பேணவும் வேடசந்தூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க வேடசந்தூர் துணைக்காவல் கண்காணிப்பாளர் (DSP) பவித்ரா அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அவரது உத்தரவின் பேரில், டி.எஸ்.பி தனிப்படையினர் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி தனிப்படையினர் வேடசந்தூர், அய்யலூர், எரியோடு, தென்னம்பட்டி உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் இன்று திடீர் சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது, அரசு அனுமதியின்றி மறைமுகமாகச் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட கும்பலை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.
இந்தச் சோதனையில், சட்டவிரோதமாக மது விற்ற சிங்கராஜ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 700 மதுபான பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களும், பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களும் மேலதிக நடவடிக்கைக்காக அந்தந்த எல்லைக்குட்பட்ட வேடசந்தூர், எரியோடு மற்றும் வடமதுரை காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டன.
இது குறித்து வேடசந்தூர், எரியோடு மற்றும் வடமதுரை போலீசார் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன? இதன் பின்னணியில் உள்ள மொத்த வியாபாரிகள் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் மது விநியோகத்தைத் தடுக்கப் போலீசார் எடுத்து வரும் இத்தகைய அதிரடி நடவடிக்கைகள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
எரிந்து காரில் சடலங்கள் அதிர்ச்சி ! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம் !!
பெண் VAO கையும் களவுமாகப் பிடிபட்டு கைது...!
ஒரு வாரத்திற்கு மழை...! இன்று ஒரு மணிநேரம்....! குளுமையான சூழல் நிலவும்...! வானிலை ஆய்வு மையம்..!
4 பேர் கைது...! 700 மது பாட்டில்கள் பறிமுதல்..! திடுக்கிடும் தகவல்...!
நள்ளிரவில் அதிரடி நடவடிக்கை...! காரில் கொண்டு சென்ற பணம் பறிமுதல்...!