| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

எரிந்து காரில் சடலங்கள் அதிர்ச்சி ! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம் !!

by satheesh on | 2026-03-18 03:33 PM

Share:


எரிந்து காரில் சடலங்கள் அதிர்ச்சி !  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம் !!

திருநெல்வேலியில் எரிந்த நிலையில் கார் ! ஒரே குடும்பத்தில் நால்வர் பலி !! 

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உருமன்குளம் பெட்டைகுளம் பகுதியில் கார் தீப்பற்றியதில் சென்னை நந்தம்பாக்கத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் நால்வர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் முகமது ரஃபீக் (45), சையது நஸ்ரின் பாத்திமா (36), 15 வயது மகள், 12 வயது மகன்.



கடன் சுமையால் பாதிக்கப்பட்டிருந்த குடும்பம் சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விற்று காரிலேயே வசித்து வந்ததாக தகவல். சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு உடைகள், பைகள் உள்ளிட்ட பொருட்களை அத்தங்கரை தர்ஹாவில் தானமாக வழங்கியதாக கூறப்படுகிறது. இது விபத்தா அல்லது தற்கொலையா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். கொலை சாத்தியம் இல்லை என தகவல். தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் எடுத்த புகைப்படங்கள், குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. என்னதான் கடன் சுமை இருந்தாலும், அதற்கு தற்கொலை தீர்வல்ல.  விவரம் தெரியாத ? புரியாத ? இரண்டு பிஞ்சு குழந்தைகள் பலியாகிது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இணை ஆசிரியர்  : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment