by admin on | 2026-08-15 01:40 PM
சுதந்திர தினவிழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு, அரசின் பல்வேறுத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில், இன்று (15.08.2026) நடைபெற்ற சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்ததுடன், பின்னர், சமாதானத்தை விளக்கும் வகையில், வெண்புறாக்களை பறக்கவிட்டார். அதனைத்தொடர்ந்து, காவல்துறை, ஊர்க்காவல்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.