| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் சுதந்திர தின விழா....!!!

by admin on | 2026-08-15 01:04 PM

Share:


திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் சுதந்திர தின விழா....!!!


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை லிமிடெட்-ன், திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் சுதந்திர தின விழாவினையொட்டி பொது மேலாளர் திரு. ஆ-முத்துகிருஷ்ணன் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைத்து, போக்குவரத்துக் கழகத்தின் சிறந்த பணியாளர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.


இந்திய திருநாட்டின் 80 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை லிமிடெட்- ன் திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பொது மேலாளர் திரு. ஆ.முத்துகிருஷ்ணன் அவர்கள் இன்று (15.08.2026) தேசியக்கொடியினை ஏற்றிவைத்து. மரியாதை செலுத்தி சிறந்த பணியாளர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

அதனை தொடர்ந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கிளைகள் வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவி பேருந்து இயக்கத்தின்போது டீசலை சிக்கனமாக பயன்படுத்திய ஓட்டுநர்களுக்கு கிளை வாரியாக தலா ஒரு ஓட்டுநர் வீதம் 14 ஓட்டுநர்களுக்கும், கிளை வாரியாக வருவாய் அதிகம் ஈட்டிய தலா ஒரு நடத்துநர் வீதம் 14 நடத்துநர்களுக்கும், சிறந்த டயர் பராமரிப்பாக 1 பணியாளருக்கும். பயணி தவறி விட்டுச் சென்ற பொருளை ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்.


மேலும், போக்குவரத்து பணியாளர்களின் குழந்தைகளில் 10-ம். 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு (ரூ.1,500/-) இரண்டாம் பரிசு (ரூ.1,000/-), மூன்றாம் பரிசு (ரூ.500/-) என குழந்தைகள் மற்றும் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் விதமாக 39 குழந்தைகளுக்கு ரூபாய் 49,000/- ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்.


மேலும் கூட்டாண்மை அலுவலகம், மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் நமது மேலாண் இயக்குனர் அவர்களிடம் சிறப்பாக பணிபுரிந்த கிளை மேலாளர், உதவி பொறியாளர். டிக்கெட் பரிசோதகர், ஓட்டுநர் பயிற்சி ஆசிரியர், சிறந்த டயர் பராமரிப்பாக 1 பணியாளருக்கும். சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுநர். சிறப்பாக பணிபுரிந்த நடத்துநர். பயணத்தின்போது உடல்நிலை பாதிக்கப்பட்ட பயணியை மருத்துவமனையில் சேர்த்து மனிதநேயத்துடன் செயல்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர், அலுவலக மேற்பார்வையாளர். அலுவலக பணியாளர், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மண்டல அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவி என 14 நபர்கள் சேர்த்து இன்றைய தினம் திண்டுக்கல் மண்டலத்திற்குட்பட்ட மொத்தம் 84 நபர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்பிக்கப்பட்டார்கள்.

இவ்விழாவில் துணை மற்றும் உதவி மேலாளர்கள், உதவிப்பொறியாளர்கள். அலுவலக மேற்பார்வையாளர்கள். அலுவலக பணியாளர்கள். சங்கப்பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அனைத்துதொழிற் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் .


தி முத்து காமாட்சி வெளியீட்டாளர் எவிடன்ஸ்  9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment