| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

போக்சோ வழக்கு - குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த காவல்துறை :

by satheesh on | 2026-01-24 09:02 AM

Share:


போக்சோ  வழக்கு - குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த காவல்துறை  :

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் ;  23.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த பழனி ராசாபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் (எ) முருகேசன் (44) என்பவரை பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சரவணகுமாரி அவர்கள், நீதிமன்ற முதல் நிலைக்காவலர் திருமதி.இலக்கியா அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்  திருமதி.மைதிலி அவர்களின் சீரிய முயற்சியால் (23.01.2026) இன்று திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி முருகன் (எ) முருகேசன் என்பவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.


இணை ஆசிரியர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment