by satheesh on | 2026-01-22 06:25 PM
நெல்லை சரகத்தில் 8 காவல் ஆய்வாளர்கள் அதிரடி இடமாற்றம்: டி.ஐ.ஜி உத்தரவு ;
நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட 8 காவல் ஆய்வாளர்களை (Taluk) உடனடியாக பணியிட மாற்றம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி (DIG) இன்று உத்தரவிட்டுள்ளார்.
பணியிட மாற்ற விவரங்கள்:
E. சாம்சன்: தென்காசி மாவட்ட குற்றப் பிரிவு ஆவணக் காப்பகத்திலிருந்து (DCRB), கன்னியாகுமரி மாவட்ட NSD (நக்சல் தடுப்பு பிரிவிற்கு) மாற்றப்பட்டுள்ளார்.
S. சத்திய பாமா: கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்து (AWPS), தென்காசி மாவட்ட DCRB பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். U. ஜென்சி: நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவிலிருந்து (PEW), கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு (AWPS) மாற்றப்பட்டுள்ளார். K. சுதாகர்: கோவில்பட்டி கிழக்கு குற்றப்பிரிவிலிருந்து, கோவில்பட்டி மேற்கு குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். S. யேசுராஜசேகரன்: தூத்துக்குடி வடக்கு குற்றப்பிரிவிலிருந்து, தூத்துக்குடி தெற்கு குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். M. மணிகண்டன்: குளத்தூர் காவல் நிலையத்திலிருந்து, எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். S. செந்தில்வேல் குமார்: எட்டயபுரம் காவல் நிலையத்திலிருந்து, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். M. ரென்னிஸ்: ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்திலிருந்து, குளத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட ஆய்வாளர்கள் விடுவிக்கப்பட்ட மற்றும் பணியில் சேர்ந்த விவரங்களை உடனடியாகத் தெரிவிக்குமாறு தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணை ஆசிரியர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பயங்கர ஆயுதங்களுடன் இருவர் கைது.....!!!!!
போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க முயற்சி,...??? வாலிபர் தற்கொலை முயற்சி....!!!!
மிரட்டும் தனியார் நிதி நிறுவனம்,....??? தற்கொலை முயற்சி....!!"
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் மறியல் போராட்டம்.....!!!!
தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முறைகேடு தேனியில் ஆர்ப்பாட்டம்....!!!