by satheesh on | 2026-01-22 03:40 PM
நாட்றம்பள்ளி அருகே மீண்டும் சந்தனகூடு உரூஸ் திருவிழாவா, இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் அபாயம்.கொலை மிரட்டல் விடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் புகார் மனு :
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் பகுதியில் கடந்த 100ஆண்டுகளுக்கு மேலாக தர்கா அமைந்துள்ளது. அந்த தர்காவில் பல ஆண்டுகளாக கதீர் என்பவர் சந்தனகூடு உரூஸ் திருவிழா நடத்தி வந்த நிலையில் இந்த ஆண்டும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவிழா நடத்தி முடித்துள்ளனர். இதனையெடுத்து மேல் முஸ்லீம் பகுதியை சேர்ந்த சித்திக் என்பவர் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து வருகிற 25.01.2026அன்று தர்காவில் மீண்டும் சந்தனகூடு உரூஸ் திருவிழா நடைப்பெறும் என தெரிவித்து அதற்கான பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள் என கூறப்படுகிறது. இதனை அறிந்த கதீர் உள்ளிட்ட தர்கா நிர்வாகிகள் காலம், காலமாக நாங்கள் வருடம் ஒருமுறை சந்தனகூடு உரூஸ் திருவிழா நடத்தி வருகிறோம் என சித்திக் தரப்பினரை கேட்டு உள்ளனர். அப்போது அவர்கள் தர்காவிற்குள் நீங்கள் நுழைந்தால் ஒருவர் கூட உயிரோடு திரும்ப மாட்டீர்கள் என கொலை மிரட்டல் விடுத்து திட்டமிட்டப்படி வருகிறது 25.01.2026அன்று நடைப்பெறும் என கதீர் தரப்பினரை துரத்தி உள்ளனர். இதனால் சந்தன கூடு உரூஸ் திருவிழாவிற்கு தடை விதிக்க கோரியும், தங்கள் உயிருக்கு சித்திக் கூட்டாளிகளால் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்க கோரியும், கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் மனு அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இணை ஆசிரியர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பயங்கர ஆயுதங்களுடன் இருவர் கைது.....!!!!!
போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க முயற்சி,...??? வாலிபர் தற்கொலை முயற்சி....!!!!
மிரட்டும் தனியார் நிதி நிறுவனம்,....??? தற்கொலை முயற்சி....!!"
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் மறியல் போராட்டம்.....!!!!
தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முறைகேடு தேனியில் ஆர்ப்பாட்டம்....!!!