by satheesh on | 2026-04-02 09:06 AM
*கன்னியாகுமரி : சட்டவிரோத கல்குவாரிகள் மீது எஸ்பி அதிரடி !
கன்னியாகுமரி மாவட்டம் தோட்டியோடு பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இரண்டு கல்குவாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகள் மூடினர். மாவட்டத்தில் பல இடங்களில் கல்குவாரிகள் விதிமீறல்களுடன் இயங்குகின்றன என்ற தகவலின் அடிப்படையில், போலீசார் தீவிர சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று தோட்டியோடு பகுதியில் நடைபெற்ற சோதனையில், அனுமதியின்றி செயல்பட்டு வந்த இரண்டு கல்குவாரிகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து அவற்றை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டது. மேலும், வெடிப்பொருள் பயன்பாட்டில் விதிமீறல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது. சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரிகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, “விதிமுறைகளை மீறி கல்குவாரிகள் இயங்கினால், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுடன் மட்டுமல்லாமல் கண்காணிப்பு தவறிய அதிகாரிகள்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சித்ரங்கோடு மற்றும் வலியாற்றுமுகம் பகுதிகளில் இயங்கிய கல்குவாரிகளும் மூடப்பட்டிருந்தன. தற்போது ஜெகன் மற்றும் மாதவதாஸ் என்பவர்களுக்கு சொந்தமானதாக கூறப்படும் இரண்டு கல்குவாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்பியின் இந்த அதிரடி நடவடிக்கையை சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் வரவேற்றுள்ளன. மாவட்டத்தில் சட்டவிரோத கல்குவாரிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!
குற்றப்புலனாய்வுத்துறை தலைமை காவலர், காவல்துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.....!!!!"
எச்சில் பாட்டில்களை வாங்க மாட்டோம் ! பணியாத பணியாளர்கள் - பிடிவாதம் பிடிக்கும் நிர்வாகம் !!
விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாட்டம் கட்டுரையாளர் ராஜசிம்மன்.....!!!
மேகமலை வன சரணாலயம் மலைவாழ் மக்கள் குறித்து CPM மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டி...???