by Vignesh Perumal on | 2026-01-30 12:37 PM
தமிழகத் திரையுலகில் சமூக மாற்றத்திற்கான கருத்துகளைத் தனது படங்கள் மூலம் உரக்கச் சொல்லி வரும் இயக்குநர் மாரி செல்வராஜ், தற்போது தமிழ்நாடு அரசின் மாநிலத் திரைப்பட விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார். 2018 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளுக்கான விருதுப் பட்டியலில் இவரது படங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
மாரி செல்வராஜின் அறிமுகத் திரைப்படமான ‘பரியேறும் பெருமாள்’ விமர்சன ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படத்திற்கு 2018-ஆம் ஆண்டிற்கான இரண்டு முக்கிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறந்த படம் (முதல் பரிசு), சிறந்த இயக்குநர் - மாரி செல்வராஜ்.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தைப் பேசிய மாபெரும் வெற்றிக்காவியமாகும். இப்படத்திற்கு 2021-ஆம் ஆண்டிற்கான மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த மூன்றாவது படம், சிறந்த வசனம், சிறந்த கலை.
இந்த அங்கீகாரம் குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் மாரி செல்வராஜ்: "2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த படம், சிறந்த இயக்குநர் என இரண்டு விருதுகளை 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்திற்கும், 2021-ஆம் ஆண்டிற்கான சிறந்த வசனம், சிறந்த கலை, சிறந்த மூன்றாவது படம் என மூன்று விருதுகளை 'கர்ணன்' திரைப்படத்திற்கும் வழங்கி கௌரவித்த தமிழ்நாடு அரசுக்கு எங்கள் நன்றிகளையும் மகிழ்ச்சிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்," எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த விருதுகளை அறிவித்துள்ள நிலையில், ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலைப் பேசும் கலைப்படைப்புகளுக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் திரையுலகினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘வாழை’ படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் தற்போது தனது அடுத்தடுத்த பிரம்மாண்ட படைப்புகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்த விருதுகள் அவருக்குக் கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளன.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
செய்தியாளர்கள் மீது தொடரும் கொலைவெறி தாக்குதல்....!!! தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஹரிகரன் கண்டனம்...!!!
தேனியில் மனிதநேய வார விழா.......!!!!!!!
இலவச நாப்கின் வழங்கல் - அனைத்து பாலினத்தவருக்கும் தனித்தனி கழிவறைகள் - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
நிருபர், ஒளிப்பதிவாளர் மீது கொலைவெறித் தாக்குதல்..! முன்னாள் ஜெயக்குமார் கடும் கண்டனம்..!
1700 போலீசார் பாதுகாப்பு..! 100 சிசிடிவி கேமராக்கள்..! போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு..! எஸ்பி ஆய்வு..!