by Vignesh Perumal on | 2026-01-30 11:49 AM
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணியின் சொந்தத் தொகுதியான ஒட்டன்சத்திரத்தில், நள்ளிரவில் சட்டவிரோதமாக மணல் கடத்திய கும்பலைப் போலீசார் அதிரடியாகச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட அம்பிளிக்கை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரங்களில் சட்டவிரோத மணல் கடத்தல் நடைபெறுவதாகக் காவல் துறைக்கு ரகசியத் தகவல்கள் கிடைத்தன.
இதனைத் தொடர்ந்து, அம்பிளிக்கை காவல் நிலைய போலீசார் நள்ளிரவில் அப்பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அம்பிளிக்கை அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த இரண்டு லாரிகளைப் போலீசார் கண்டனர்.
போலீசாரைக் கண்டதும் லாரிகளை நிறுத்தாமல் கடத்தல் கும்பல் தப்பிச் செல்ல முயன்றது. எனினும், உஷாரான போலீசார் தங்களது வாகனங்கள் மூலம் கடத்தல் லாரிகளைச் சினிமா பாணியில் துரத்திச் சென்று, நான்கு புறமும் சுற்றி வளைத்து நிறுத்தினர்.
அந்த லாரிகளில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளிச் செல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு லாரிகளையும் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் உடனடியாக அம்பிளிக்கை காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. இது தொடர்பாக மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
போலீசாரைக் கண்டதும் லாரியில் இருந்து குதித்துத் தப்பியோடிய டிரைவர்கள் மற்றும் கடத்தல் கும்பலைச் சேர்ந்த மற்ற நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த மணல் கடத்தலுக்குப் பின்னால் உள்ள முக்கிய நபர்கள் யார்? எந்தப் பகுதிகளில் இருந்து மணல் திருடப்பட்டது? என்பது குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!
குற்றப்புலனாய்வுத்துறை தலைமை காவலர், காவல்துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.....!!!!"
எச்சில் பாட்டில்களை வாங்க மாட்டோம் ! பணியாத பணியாளர்கள் - பிடிவாதம் பிடிக்கும் நிர்வாகம் !!
விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாட்டம் கட்டுரையாளர் ராஜசிம்மன்.....!!!