by admin on | 2025-10-11 11:45 AM
*முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஓட்டல் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை*
தூத்துக்குடி முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில், சொந்த பிரச்னையின் போது பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை வாங்கச் சென்ற ஓட்டல் உரிமையாளர் தூத்துக்குடி, முள்ளக்காடு, காந்தி நகரை சேர்ந்த சுவிசேஷராஜ் (42). மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டு, ஸ்டேஷனுக்குள் உடலில் தீ கொழுந்து விட்டு எரிய நடந்தே சென்றார். இதைப் பார்த்து பதறிய போலீசார் அவரது உடலில் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து அவரை மீட்டனர். பின்னர் மயங்கிச் சரிந்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சுவிசேஷராஜ் உயிர் இழந்தார் இதுகுறித்து தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான், ஏஎஸ்பி மதன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்கள் பாலாஜி , கதிரேசன் பழனி
இலவச மருத்துவ முகாம்..!!! வைகை ஸ்கேன் டாக்டர் பாண்டியராஜன் தலைமையில் நடைபெறுகிறது...!!
கன்னியாகுமரி மாவட்ட சூப்பர் ஸ்டார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்...!!!
வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2492 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது..!!!
மீனவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முயற்சியா....???
கோயிலுக்குள் கொடூரம்....! இருவர் வெட்டிக் கொலை...!