| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

புகையிலை பொருட்கள் அழிப்பு....!!!"

by admin on | 2026-05-12 01:08 PM

Share:


புகையிலை பொருட்கள் அழிப்பு....!!!"

தேனி மாவட்டத்தில் புகையிலை தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.அதன் அடிப்படையில் இதுவரை மொத்தம் 407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 12,207 கிலோ கிராம் புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


கைப்பற்றப்பட்ட புகையிலை பொருட்களில் 8,884 கிலோ கிராம் புகையிலை, நீதிமன்ற உத்தரவின்பேரில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் B. சினேஹாப்ரியா, இ.கா.ப., அவர்கள் தலைமையில் 09.05.2026 அன்று  கொட்டி அழிக்கப்பட்டது.


மேலும், தேனி மாவட்டத்தில் புகையிலைப் பொருட்களின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் நோக்கில், புகையிலை விற்பனை மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.


#Thenidistrict #thenidistrictpolice #SouthZoneTNpol #TNPolice

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment