by satheesh on | 2026-06-17 04:56 PM
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பத்மநாபபுரம் அரண்மனையை அதன் பழமை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ். ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். ஆசியாவிலேயே முழுமையாக மரத்தால் கட்டப்பட்ட அரண்மனையாக விளங்கும் பத்மநாபபுரம் அரண்மனை பல நூற்றாண்டுகளாக சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வரும் நிலையில், போதிய பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் அதன் பொலிவு குறைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான கோரிக்கை மனுவை கேரள முதலமைச்சர் வி.டி. சதீசனை நேரில் சந்தித்து ஆர்.எஸ். ராஜன் வழங்கினார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரண்மனையை பாதுகாக்க கேரள அரசு உடனடியாக நிதி ஒதுக்கி, பழமைத் தன்மையை பாதிக்காமல் புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
தேனி கலெக்டர் வைத்தியநாதன் ஆய்வு....!!!!!
, பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்....
கள்ளக்காதல் - பெண் எரித்துக் கொலை ! தந்தை மகன் கைது !!
பஸ்ஸில் மனைவி மகளுக்கு சரமாரி அரிவாள் வெட்டு ! கணவர் கைது !!
'எய்ம் ஃபார் சேவா'வின் 'தயானந்த கிருபா கேர்' பராமரிப்பு நிதி திரட்ட, சென்னையில் 'ராதா - பக்தியின் உருவகம்' பரதநாட்டிய நிகழ்ச்சி