by satheesh on | 2026-06-17 05:06 PM
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியில் ரூ.2.65 கோடி மோசடி நடைபெற்ற வழக்கில் வங்கி எழுத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் சிவனேஸ்வரி உள்ளிட்ட 6 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியில் கடந்த 2017 முதல் 2024 வரை தங்க நகைகளை அடகு வைத்தது போன்று போலி பதிவுகள் செய்து ரூ.2.65 கோடி மோசடி நடைபெற்றது தணிக்கையின் போது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சங்க துணைப் பதிவாளர் முருகேசன் அளித்த புகாரின் பேரில் நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக வங்கியின் முன்னாள் செயலாளர் சகாய திலக்ராஜ், வங்கி எழுத்தர்கள் முத்துகிருஷ்ணன் மற்றும் சிவனேஸ்வரி, சகாய திலக்ராஜின் மனைவி பார்வதி, உறுப்பினர் இசை பிரதீப் உள்ளிட்ட மொத்தம் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆரல்வாய்மொழி தெற்கு ஊரைச் சேர்ந்த வங்கி எழுத்தர் முத்துகிருஷ்ணனை நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கோட்டாறு குலாலர் தெருவைச் சேர்ந்த சிவனேஸ்வரி உள்ளிட்ட மற்ற 6 பேரையும் கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த மோசடி தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி - ஒருவர் கைது ! பெண் உட்பட 6 பேரைத் தேடும் போலீஸ் !!
பத்மநாபபுரம் அரண்மனை - பழமை மாறாமல் புதுப்பிக்க கோரிக்கை. !
போதை மாத்திரை விற்பனை - 3 பேர் கைது ! பொறி வைத்து பிடித்த போலீஸ் !!
விபரங்கள் இல்லாத ரசீது - வழக்கு ! ஆணையாளருக்கு பிடிவாரென்டு.!!
மசாஜ் சென்டரில் ஹைடெக் விபச்சாரம் - தட்டி தூக்கி போலீஸ் அதிரடி!