| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

துணிக்கடையில் வேலை ! சைடு பிசினஸ் கஞ்சா விற்பனை - தட்டி தூக்கிய போலீஸ் !!

by satheesh on | 2026-06-15 01:55 PM

Share:


துணிக்கடையில் வேலை !  சைடு பிசினஸ் கஞ்சா விற்பனை - தட்டி தூக்கிய போலீஸ் !!

திண்டுக்கல்லில் பிரபல துணிக்கடையில் வேலை ! சைடு பிசினஸ் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது ;


திண்டுக்கல் : வரதராஜா காம்ப்ளக்ஸில் உள்ள பிரபல துணிக்கடையிலவையம்பட்டி அருகே நடுப்பட்டி சேர்ந்த ராமமூர்த்தி மகன் ராஜ்குமார்(27) என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கடையில் பணிபுரியும் சக ஊழியர்களுக்கும், மற்றவர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது துணிக்கடையின் பின்புறம் R.S.ரோடு பகுதியில் கையில் கஞ்சா வைத்து செல்போனில் அழைத்து விற்பனை செய்து கொண்டிருந்தபோது போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 


இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment