| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

காவல் நிலைய லாக்கப்பில்...! கைதி தப்பியோட்டம்...! பரபரப்பு...!

by Vignesh Perumal on | 2026-05-11 10:41 AM

Share:


காவல் நிலைய லாக்கப்பில்...! கைதி தப்பியோட்டம்...! பரபரப்பு...!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில், குற்றவழக்கு தொடர்பாக அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி ஒருவர் போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோடிய சம்பவம் காவல் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெஞ்ஞானபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற ஒரு குற்றவழக்கு தொடர்பாக, தமிழரசன் (22) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய பிறகு, மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் உள்ள கைதிகள் அறையில் அடைத்து வைத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு அல்லது இன்று அதிகாலை நேரத்தில், போலீசாரின் பாதுகாப்பையும் மீறி தமிழரசன் காவல் நிலையத்திலிருந்து தப்பியோடியுள்ளார். கைதிகள் அறையில் இருந்த நபர் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கு பணியில் இருந்த போலீசார், உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

கைதி தப்பியோடியதைத் தொடர்ந்து, திருச்செந்தூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தமிழரசன் தப்பிச் செல்ல வாய்ப்புள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல் நிலையத்திலேயே கைதி தப்பியோடிய சம்பவம், அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போலீசாரின் கவனக்குறைவு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பணியில் இருந்த காவலர்களிடம் துறை ரீதியான விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தப்பியோடிய தமிழரசனைப் பிடிக்க மாவட்ட எல்லைகளிலும் சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment