by aadhavan on | 2026-05-30 08:16 PM
» மு. ஆதவன்
பிள்ளைமார், முதலியார் வரன்களுக்கான இலவச மணமாலை நிகழ்ச்சி, மதுரையில் நாளை ஞாயிற்றுக் கிழமை (மே.31) நடக்கிறது.
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் (எய்ம்பா), பாண்டிய மண்டலம் - மதுரை மாவட்டம் சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை தல்லாகுளம், லட்சுமிசுந்தரம் ஹாலில் காலை 8 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குகிறது.
இம்பா நிறுவன தலைவர் அருணாசலம் முதலியார், எய்ம்பா நிறுவன தலைவர் ஓம்சக்தி ஆர்.ராமச்சந்திரன், பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.கே. ரகுராம், பொருளாளர் எம்.ரவி முதலியார், துணைத்தலைவர் டி. ராமச்சந்திர குமார் தலைமை வகிக்கின்றனர்.
செங்குந்தர் மஹா ஜன சங்கம். கே.பி.கே.செல்வராஜ், தமிழ்நாடு சைவ வேளாளர்கள் சங்கம் பண்ணை சிவா, சேனைத் தலைவர் மஹாஜன சங்கம் மாரிமுத்து, ஆறுநாட்டு வெள்ளாளர் சங்கம் செல்வராஜ் தலைவர், வெள்ளாளர் முன்னேற்ற கழகம் அண்ணா சரவணன், மக்கள் தலைவன் வ.உ.சி., நலப்பேரவை மா.பா. நமச்சிவாயம், இல்லத்துப் பிள்ளைமார் சங்கம் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த வரன்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். விழா அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் (எய்ம்பா) சார்பில் மணமாலை ★ மதுரையில் மே.31 ல் நடக்கிறது
ADMK எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது தற்கொலைக்கு சமம்...!!! வழக்கறிஞர் பாண்டியராஜன்...
பொதுமக்கள் தங்களது குறைகள் - கோரிக்கைகளை தெரிவிக்க புதிய வாட்ஸ்அப் எண் வெளியீடு ! தேனி கலெக்டர் அறிவிப்பு !!
பெரியகுளத்தில் அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டிகள் - சென்னை இந்தியன் வங்கி அணி சாம்பியன்.!
அரசியல் வரலாற்றில் முதல் முறையாக...! சட்டமன்றத்தில்...! பொறுப்புகள்...!