by Vignesh Perumal on | 2026-07-05 06:39 PM
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பூரில் கன்டெய்னர் லாரியில் மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்ட சுமார் ஒரு டன் எடையுள்ள, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை (குட்கா) போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்திற்குள் பெருமளவில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஜெயக்குமார் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, எஸ்பியின் உத்தரவின் பேரில், திண்டுக்கல் புறநகர் டி.எஸ்.பி. (DSP) சங்கர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையில், சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் தாடிக்கொம்பு மேம்பாலம் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒரு கன்டெய்னர் லாரியை போலீசார் மறித்து நிறுத்தினர். லாரியை சோதனையிட்ட போது, அதில் ரகசியமாக மூட்டை மூட்டையாக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் மறைத்து கடத்தி வரப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
லாரியில் கடத்தி வரப்பட்ட சுமார் 1 டன் (1,000 கிலோ) எடையுள்ள குட்கா மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கன்டெய்னர் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் சந்தை மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (46) என்பவரை தாடிக்கொம்பு போலீசார் கைது செய்தனர்.
மேலும், போலீசார் சுப்பிரமணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க போலீசார் எடுத்து வரும் இந்த அதிரடி நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!
சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை - பிரியாணி கடை அதிபர் போக்சோவில் கைது !
போதைப் பொருளை கண்டுபிடிக்க பயிற்சி முடித்த ராணா மோப்பநாய்.....!!!!
3 வருடங்களுக்கு மேல் "ஒரே பணி - அதே இடம் " ..? இடம் மாற்றம் செய்து கலெக்டர் அதிரடி !!