by admin on | 2026-07-04 06:50 PM
போதைப்பொருள் கண்டறிய மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயிற்சி முடித்த "ராணா" மோப்பநாய்
தேனி மாவட்ட துப்பறியும் மோப்பநாய் படை பிரிவிற்கு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட "லாப்ரடர்" இனத்தைச் சேர்ந்த "ராணா" என்ற மோப்பநாய், போதைப்பொருள் கண்டறிதல் தொடர்பான 6 மாத கால சிறப்பு பயிற்சியை முடித்து மாவட்டத்திற்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. K.S. பிரவீன்கெளதம், இ.கா.ப., அவர்கள் "ராணா" மோப்பநாயை பார்வையிட்டு அதன் செயல்திறன் மற்றும் பயிற்சி தொடர்பான விவரங்களை ஆய்வு செய்தார்.
மேலும் இந்த மோப்பநாய் போதைப்பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் பதுக்கல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிவதிலும், மறைத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை துல்லியமாக கண்டுபிடிப்பதிலும் காவல்துறையினரின் புலனாய்வு மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்கு முக்கிய பங்காற்றும் என தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளின் இல்லங்களில் மரக்கன்றுகள் நடவு....!!!!
திருப்பூர் கோபுரம் பவுண்டேஷன் அறக்கட்டளையின் சேவையை பாராட்டி கலெக்டர் நற்சான்று....!!!
தமிழ்நாடு ரோல் பால் ஸ்கேட்டிங் ஜூனியர் போட்டி திருச்சியில் துவங்கியது....!!!
தேனியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்....!!!"
சிவகங்கை கலெக்டர் தலைமையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்...!!! நலத்திட்ட உதவிகள் வழங்கல்...!!!