by Muthukamatchi on | 2025-03-19 02:08 PM
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சி ,சக்கம்பட்டியில் உள்ள திருவள்ளுவர் காலனி சமுதாய கூடத்தில் ,உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.மனிதநேய அறக்கட்டளை ,ஏபிடி அகாடமி இணைந்து, தேனி வைகை ஐ கேர் சார்பாக இந்த இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தினர். முகாமினை ஆண்டிபட்டி காவல்துறை சார்பு ஆய்வாளர் சுமதி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முகாமில் கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பரிசோதனைகளும், அறிவுரைகளும், அதனை தொடர்ந்து, தேவைப்பட்டோருக்கு கண்ணாடி அணிவதற்கும், கண் புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டது. இந்தமுகாமில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளையின் நிறுவன தலைவர் மாசி மலை, மாநிலஒருங்கிணைப்பாளர் லதா, மாநில செயலாளர் ஜெகஜோதி, மாவட்ட தலைவர் பாண்டி,ஏபிடி நிறுவனர் சந்திரசேகர் உள்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!