by satheesh on | 2026-03-15 05:48 PM
கோவையில் பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், கோவை புதூர் 4-வது பட்டாலியன் (சிறப்பு போலீஸ் படை) கமாண்டண்ட் செந்தில்குமார் மார்ச் 14, 2026 அன்று கைது செய்யப்பட்டார். கோவை புதூர் 4-வது பட்டாலியனில் பணியாற்றிய பெண் போலீசாருக்கு, அங்கு கமாண்டண்ட்டாக இருந்த செந்தில்குமார் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இது குறித்துத் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் கடந்த பிப்ரவரி மாதம் செந்தில்குமாரை சஸ்பெண்ட் (பணி இடைநீக்கம்) செய்து உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட பெண் போலீசார் அளித்த புகாரின் அடிப்படையில், கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் செந்தில்குமார் மீது பாலியல் வன்கொடுமை, மிரட்டல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு தொடர்பாக செந்தில்குமாரைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி - ஒருவர் கைது ! பெண் உட்பட 6 பேரைத் தேடும் போலீஸ் !!
பத்மநாபபுரம் அரண்மனை - பழமை மாறாமல் புதுப்பிக்க கோரிக்கை. !
போதை மாத்திரை விற்பனை - 3 பேர் கைது ! பொறி வைத்து பிடித்த போலீஸ் !!
விபரங்கள் இல்லாத ரசீது - வழக்கு ! ஆணையாளருக்கு பிடிவாரென்டு.!!
மசாஜ் சென்டரில் ஹைடெக் விபச்சாரம் - தட்டி தூக்கி போலீஸ் அதிரடி!