by satheesh on | 2026-03-12 06:55 PM
கெங்குவார்பட்டியில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக உணவகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு. திமுக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உள்ளிட்ட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைப்பு :
இதில் உணவகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் கெங்குவார்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளராக இருந்துள்ளார் இவர் கெங்குவார்பட்டி பகுதியில் தனியார் மதுபான கடை வைத்து நடத்தி வருகிறார் இந்த கடையில் மதன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஸ்டீபன் தனியார் மதுபான கடை நடத்தி வருகிறார் இவருக்கும் சுதாகர் என்பவர் அரசு மதுபான கடையில் பார் எடுத்து நடத்தி வருகிறார் இருவருக்கும் ஏற்கனவே இந்த பார் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து உள்ளது. இதனால் மதன் என்பவர் சுதாகர் நடத்தி வரும் ஹோட்டலுக்கு உணவருந்த சென்றபோது அங்கு கெங்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் இருந்துள்ளார் இருவருக்கும் ஓர் ஆண்டுகளுக்கு முன்பு முன் விரோதம் இருந்து வந்ததாகவும் இதனால் இருவருக்கும் அங்கு வாக்குவாதம் நடைபெற்று உள்ளது அப்போது மதனை முருகன், விமல் ராஜ் சந்தோஷ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தாக்கி உள்ளனர் இந்த பிரச்சனைக்கு காரணம் சுதாகர் என்று நினைத்து ஸ்டீபன் தூண்டுதலில் படி தனுஷ் மற்றும் இருவர் சேர்ந்து ஹோட்டலில் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். இதனை தகவல் அறிந்த சுதாகர் அங்கு வாட்ச்மேன்னாக பணிபுரியும் ஞானசேகர் என்பவரை இருசக்கர வாகனத்தை கொடுத்து யார் பெற்றோர் குண்டு வீசியது என போய் பார்த்து வாய் என கூறியுள்ளார் அப்போது அவர் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது சீசன் அரவிந்த் சக்தி பிரகாஷ் ஆகிய நான்கு பேரும் வழிமறித்து ஞானசேகரன் தாக்கி அவர் வந்த இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நான்கு பேரும் சுதாகர் ஓட்டலுக்கு வந்து சுதாகர் மற்றும் பிரபுவையும் தாக்கியுள்ளனர். இந்த இருதரப்பு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் பிரபு ஞானசேகர் மதன் ஆகிய மூன்று பேரும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
மேலும் உணவகத்தில் பணிபுரியும் பிரபு என்பவர் தாக்கப்பட்டு காயம் அடைந்துள்ளார் அவர் கூறுகையில் ஸ்டீபன் என்பவர் தனது ஓட்டலுக்கு வந்து இங்கு என்ன பிரச்சனை நடந்தது உள்ளன கேட்டார் அப்போது எனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய போது கையில் வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து மண்டையில் அடித்து காயப்படுத்தினார் நான் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது திமுக சென்ற நிர்வாகிகள் தன்னை ரிச்சார்ஜ் செய்து மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி உள்ளனர் எனக்கு உடம்பில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார் இந்த பிரச்சனை சம்பந்தமாக தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த பெட்ரோல் குண்டு வீசிய சம்பந்தப்பட்ட வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகளான திமுக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஸ்டீபன், அரவிந்த், பிரசாத், சக்தி, சந்தோஷ், தனுஷ் குமார், சிவா, அர்ஜுன் , ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் இதில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் முக்கிய குற்றவாளிகளான திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன், அரவிந்த், சக்தி பிரசாத், தனுஷ்குமார், ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர். கெங்குவார்பட்டி பகுதியில் ஹோட்டலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே அச்சமும் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பெரியகுளம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு - அதிர்ச்சி ! இரு தரப்பு மோதல் - பரபரப்பு !! திமுக நிர்வாகி உட்பட 5 பேர் !கைது !!
பழனியில் பயங்கரம்....! வீட்டில் புகுந்து பெண்களை மிரட்டிய...! 2 பெண்கள் உட்பட 7 பேர் அதிரடி கைது...!
ஜீவனாம்ச வழக்கு - கணவன் கேட்ட ஒரே கேள்வி ! ஷாக்கான நீதிபதி !!
12 வயது சிறுமி 4 மாத கர்ப்பம்...! இளைஞர் அதிரடி கைது...! பதறிப்போன பெற்றோர்....!
புதிய கூட்டணிக்கு வியூகம் - தமிழக அரசியலில் பரபரப்பு ! சூடு பிடிக்கும் தேர்தல் களம் !!