by Vignesh Perumal on | 2025-03-19 11:20 AM
அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் அதற்கு எதிராக தமிழக அரசு ஒரு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதாவது, "பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கட்", "மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராதவர்களின் விவரங்களை சேகரிக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.