by admin on | 2026-02-04 07:46 PM
*போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் மற்றும் இன்ஜின் ஆயில் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு*
தேனி அருகே ஆதிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நிர்மல் செல்வன் (33) இவர் தனது குடும்பத்தினருடன் ஆதிபட்டி கிராமத்தில் வசித்து வருகிறார்
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தனது பெரியம்மா பழனிவேல் அவரது பெயரில் உள்ள வீட்டினை விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவருக்கு எழுதிக் கொடுத்ததாக கூறி பாக்கியலட்சுமியின் மகன்கள் வீடு தங்களுக்கு சொந்தமானது என தெரிவித்து வந்தனர்
இந்த நிலையில் பழனிவேல் உயிர் இழப்பதற்கு முன்பு தங்கள் குடும்பத்தினருக்கு சொத்துக்கள் உயில் எழுதி உள்ளதாக கூறி நிர்மல் செல்வன் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வழக்கு விசாரணை ஆனது தேனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பாக்கியலட்சுமி மகன்கள் ஜெயஜீவன் ராம், ஜெயசீலன் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக ஆதிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தான கிருஷ்ணன் ஆகியோர்கள் அடியாட்களை வைத்து மிரட்டல் விடுத்து முறைகேடாக வீட்டினை அபகரிக்கும் நோக்கத்தோடு நில அளவையாரை அழைத்துக் கொண்டு வீட்டினை அளவிடும் செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கியதாகவும்
இதனால் ஆத்திரமடைந்த நிர்மல் செல்வன் எதிர்ப்பு தெரிவித்து மண்ணெண்ணெய் மற்றும் இன்ஜின் ஆயிலை தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தார்
இதனை அடுத்து போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்
போலியான பத்திர பதிவு செய்து வீட்டை அபகரிக்க முயற்சி செய்தும் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாக்கியலட்சுமி மகன்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக செயல்பட்ட ஆதிப்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் அவரது மகன் சந்தான கிருஷ்ணன் ஆகியோர் மீது தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிர்மல் செல்வன் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்
போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க முயற்சி,...??? வாலிபர் தற்கொலை முயற்சி....!!!!
மிரட்டும் தனியார் நிதி நிறுவனம்,....??? தற்கொலை முயற்சி....!!"
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் மறியல் போராட்டம்.....!!!!
தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முறைகேடு தேனியில் ஆர்ப்பாட்டம்....!!!
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதியோர் உதவித்தொகை ஆணை வழங்கிய கலெக்டர் ரஞ்ஜீத் சிங்...!!!