by admin on | 2026-02-04 07:32 PM
*தேர்தல் வாக்குறுதியில் கூறிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இரண்டாவது நாளாக சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம்*
*போராட்டத்தில் ஈடுபட்ட 800க்கும் மேற்பட்ட பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்*
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் தேர்தல் வாக்குறுதியில் கூறிய பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர் தேனி நேரு சிலை பகுதியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 800-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து வழங்க வேண்டும்
சத்துணவு, அங்கன்வாடி மற்றும் வருவாய், கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7850 ரூபாய் வழங்க வேண்டும் 70 வயது பூர்த்தியான ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதலாக 10% ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 800க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர் இதனால் தேனி - கம்பம் நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
எச்சில் பாட்டில்களை வாங்க மாட்டோம் ! பணியாத பணியாளர்கள் - பிடிவாதம் பிடிக்கும் நிர்வாகம் !!
விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாட்டம் கட்டுரையாளர் ராஜசிம்மன்.....!!!
மேகமலை வன சரணாலயம் மலைவாழ் மக்கள் குறித்து CPM மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டி...???
உலக தாய்ப்பால் வார விழா பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்.....!!!
மேகமலை மலை கிராம மக்கள் தேனி கலெக்டர் அலுவலகம் முற்றுகை...!!! போராட்டம் தீவிரம்....!!!"