| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

பிப்ரவரி 16 வரை..! போராட்டங்களுக்கு தடை...! எஸ்பி அதிரடி உத்தரவு...!

by Vignesh Perumal on | 2026-02-03 02:19 PM

Share:


பிப்ரவரி 16 வரை..! போராட்டங்களுக்கு தடை...! எஸ்பி அதிரடி உத்தரவு...!

நெல்லை மாநகரில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வரும் பிப்ரவரி 16-ம் தேதி வரை போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதித்து மாநகர காவல் ஆணையாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'பிப்ரவரி 1-ம் தேதி முதல் பிப்ரவரி 16-ம் தேதி நள்ளிரவு வரை இந்தத் தடை அமலில் இருக்கும்.

மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், சாலை மறியல் போராட்டங்கள், உருவ பொம்மை எரிப்பு, உண்ணாவிரதப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாநகரில் நிலவும் சட்டம் ஒழுங்கு சூழலைக் கருத்தில் கொண்டும், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் அறிவித்துள்ள போராட்டங்களால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாமல் இருக்கவும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விதிவிலக்காக ஏதேனும் முக்கிய நிகழ்வுகளுக்குப் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் இருந்தால், அதற்கு முன்கூட்டியே காவல் ஆணையர் அலுவலகத்தில் உரிய அனுமதி பெற வேண்டும்.

காவல்துறையின் முன் அனுமதியின்றி தடையை மீறி கூட்டமாகச் சேருபவர்கள் அல்லது போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகரின் முக்கிய சந்திப்புகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

இந்தத் தடை உத்தரவு காரணமாக, மாநகரப் பகுதியில் நிலவும் அமைதியைப் பராமரிக்கப் பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நெல்லை மாநகரக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.









நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment