by admin on | 2026-02-02 07:33 PM
தேனி மாவட்ட காவல்துறையின் சார்பில், ( RTOR - Refresher Training For Other Ranks ) காவலர்களுக்கான திறன் மேம்பாட்டு மறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
மேற்படி பயிற்சி வகுப்புகள், தேனி மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.B. சினேஹா ப்ரியா, இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றன.இப்பயிற்சி நிகழ்வில், தேனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.முத்துக்குமார், காவல் துணை கண்காணிப்பாளர் DCRB திரு.தேவராஜ், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். இப் பயிற்சியின் போது, சட்ட ஒழுங்கு பராமரிப்பு, பொதுமக்களுடன் நட்பு முறையில் செயல்படுதல், அவசர கால நடவடிக்கைகள், மற்றும் சமகால காவல் பணிகளுக்குத் தேவையான புதுப்பிக்கப்பட்ட செயல்முறைகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம் காவலர்களின் தொழில்முறை திறன், சட்ட அறிவு மற்றும் பணித் திறனை மேலும் மேம்படுத்துவது இப் பயிற்சியின் முக்கிய நோக்கமாக இருந்தது.
சிறுமி உயிரிழந்த விவகாரம் - இருவர் மீது வழக்குப்பதிவு ! முடிவுக்கு வந்த போராட்டம் !!
கே என் நேரு மீதான முறைகேடு வழக்கு ! நீதிமன்றம் சரமாரி கேள்வி !!
விளாத்திகுளம் சம்பவம் - எஸ் வி சேகர் சர்ச்சை பேச்சு !
ஓசி சிகரெட் - மறுத்த கடைக்காரரை அறிவாளால் வெட்டிய பயங்கரம் ! போதை கும்பல் அட்டகாசம் !!
விளாத்திகுளம் சம்பவம் - சமூக வலைதளங்களில் சிறுமி புகைப்படம் வெளியீடு ! வழக்குகள் பதிவு !!