| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்...!! 300 மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது...!!!!

by admin on | 2026-02-02 06:22 PM

Share:


மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்...!! 300 மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது...!!!!

தேனி  மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற                                            மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  380  கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (02.02.2026)  நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 380 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய  வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள்  என மொத்தம் 380  கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.  அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில்  மனவளர்ச்சி குன்றிய 2 மாற்றுத்திறனாளிகளுக்கு  பாதுகாவலர் நியமன சான்றிதழ்களை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  வழங்கினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.ராஜகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)  திரு.பஞ்சாபகேசன், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத்திட்டம்)  திருமதி கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலம்) திரு.கதிர்வேல்,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.சண்முகசுந்தர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி  காமாட்சி   உட்பட அரசு அலுவலர்கள்  பலர்   கலந்து கொண்டனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment