by admin on | 2026-02-02 04:27 PM
தேனியில் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்....!!!
தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்*
கறிக்கோழி பண்ணை உற்பத்தியாளருக்கு,வளர்ப்பு கூலி கிலோவுக்கு 20 ரூபாய் வழங்க கோரி, கண்ணில் கருப்பு பட்டை கட்டி ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், கண்ணில் கருப்பு துணி கட்டி கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
கறிக்கோழி பண்ணைகளுக்கு கட்டாயப்படுத்தி குஞ்சுகளை இறக்குவதை தடுக்கவும், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் முருகசாமி மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனு, தேனி ஆட்சியர ரஞ்சித் சிங்கிடம் வழங்கப்பட்டது. இது குறித்த ஆய்வுக்கும் விசாரணைக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
எச்சில் பாட்டில்களை வாங்க மாட்டோம் ! பணியாத பணியாளர்கள் - பிடிவாதம் பிடிக்கும் நிர்வாகம் !!
விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாட்டம் கட்டுரையாளர் ராஜசிம்மன்.....!!!
மேகமலை வன சரணாலயம் மலைவாழ் மக்கள் குறித்து CPM மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டி...???
உலக தாய்ப்பால் வார விழா பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்.....!!!
மேகமலை மலை கிராம மக்கள் தேனி கலெக்டர் அலுவலகம் முற்றுகை...!!! போராட்டம் தீவிரம்....!!!"