| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

பைக்கில் கடத்தல்...! தனிப்படை அதிரடி வேட்டை...! 12.5 கிலோ பறிமுதல்...!

by Vignesh Perumal on | 2025-12-23 11:02 AM

Share:


பைக்கில் கடத்தல்...! தனிப்படை அதிரடி வேட்டை...! 12.5 கிலோ பறிமுதல்...!

ஒரிசா மாநிலத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த வாலிபரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையினர் அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து 12.5 கிலோ கஞ்சா மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) பிரதீப் அவர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில், ஒரிசா மாநிலத்திலிருந்து ஒரு நபர் இருசக்கர வாகனத்திலேயே கஞ்சா கடத்தி வருவதாக எஸ்பி அவர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில், எஸ்பி-யின் தனிப்படையினர் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரை அடுத்த தங்கம்மாபட்டி சோதனைச் சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்திச் சோதனை செய்தனர்.

அப்போது, அந்த வாகனத்தில் பெரிய மூட்டைகளில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், பிடிபட்ட நபர் திண்டுக்கல் குள்ளனம்பட்டியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (41) என்பதும், அவர் ஒரிசா மாநிலத்திலிருந்து நீண்ட தூரம் இருசக்கர வாகனத்திலேயே கஞ்சாவைக் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட தமிழ்ச்செல்வனிடமிருந்து கீழ்க்கண்டவை பறிமுதல் செய்யப்பட்டன. 12.5 கிலோ கஞ்சா (இதன் சந்தை மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கருதப்படுகிறது). கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம்.

அவரிடம் இருந்த ரூ. 12,000 ரொக்கப் பணம்.

கைது செய்யப்பட்ட தமிழ்ச்செல்வனையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் வாகனத்தையும் தனிப்படையினர் வடமதுரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வடமதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்த கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? ஒரிசாவில் யாரிடமிருந்து கஞ்சா வாங்கப்பட்டது? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிமாநிலத்தில் இருந்து சுமார் 1,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் இருசக்கர வாகனத்திலேயே கஞ்சா கடத்தி வரப்பட்ட சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.











நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment