| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

நெகிழ்ச்சி சம்பவம்...! வாலிபர் மூளைச்சாவு...! அரசு மரியாதை...! குவியும் பாராட்டுக்கள்...!

by Vignesh Perumal on | 2026-03-29 12:45 PM

Share:


நெகிழ்ச்சி சம்பவம்...! வாலிபர் மூளைச்சாவு...! அரசு மரியாதை...! குவியும் பாராட்டுக்கள்...!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள S. பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்பாண்டியன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், மருத்துவர்கள் பரிசோதனையில் அருண்பாண்டியன் மூளைச்சாவு அடைந்ததாக உறுதி செய்யப்பட்டது.

இந்தத் துயரமான நிலையிலும், மகனின் நினைவாக அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது பெற்றோர்கள் முன்வந்தனர். இது பிறருக்கு வாழ்வளிக்கும் ஒரு உன்னதமான செயலாகப் பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த அருண்பாண்டியனின் குடும்பத்தினர், மிகுந்த துயரத்திலும் உடல் உறுப்பு தானத்திற்குச் சம்மதம் தெரிவித்தது மிகப்பெரிய தியாகம். இதன் மூலம் பலரது உயிரைக் காப்பாற்ற முடியும். தானமாகப் பெறப்பட்ட இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் ஆகியவை உரிய மருத்துவ நெறிமுறைகளின்படி அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு, உறுப்பு மாற்று சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்காகத் தனி மருத்துவக் குழுவினர் சிறப்பாகச் செயல்பட்டனர்."


தமிழக அரசின் புதிய அறிவிப்பின்படி, உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்படும். அதன்படி, அருண்பாண்டியனின் உடலுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் உரிய மரியாதை செலுத்தப்பட்டு, அவரது சொந்த ஊரான S. பாறைப்பட்டியில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய அந்தப் பெற்றோரின் செயலைச் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.







நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment