by Vignesh Perumal on | 2026-03-28 04:55 PM
திண்டுக்கல் மாநகரப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீஸார் ரோந்து சென்றனர்.
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டம் அருகே, நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில், சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் பதுக்கி வைத்து அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரைப் பிடித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த தரணிபாலன் என்பது தெரியவந்தது.
போலீஸார் தரணிபாலனை கைது செய்து, அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
திண்டுக்கல் மாநகரில் டாஸ்மாக் நேரம் முடிந்து இரவு நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கோவை வடக்கு தொகுதி - பா ஜ க வில் மல்லுக்கட்டு ! அண்ணனா ? அக்காவா ?
தேர்தல் அதிரடி...! கலெக்டரின் செயல்...! ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள்...!
வீரத்தமிழர் மக்கள் கழகம் அதிமுகவிற்கு ஆதரவு.....!!!
திண்டுக்கல்லில் சட்டவிரோத விற்பனை...! வாலிபர் கைது..!
செல்வப் பெருந்தகை மட்டும் காங்கிரஸ் கிடையாது ! கொந்தளிக்கும் ஜோதிமணி !!