| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் Congress

செல்வப் பெருந்தகை மட்டும் காங்கிரஸ் கிடையாது ! கொந்தளிக்கும் ஜோதிமணி !!

by satheesh on | 2026-03-28 01:48 PM

Share:


செல்வப் பெருந்தகை மட்டும் காங்கிரஸ் கிடையாது !  கொந்தளிக்கும் ஜோதிமணி !!

விற்பனை அணுகுமுறையோடு வேட்பாளர் தேர்வு: கொதிக்கும் ஜோதிமணி! 


காங்கிரஸ் தொகுதி, வேட்பாளர் தேர்வு குறித்து, கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டிருக்கும் கருத்து அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது முழு பதிவு விவரம்:- காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தனமையும் இல்லை. வெளிப்படைத்தன்மையோடும், விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற எங்கள் கருத்தை பொறுப்பாளர்கள்  ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது.   காங்கிரஸ் கட்சியின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது. நம் போன்ற உண்மையான  காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத்திண்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது. இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மௌனமாக இருக்க முடியாது.  பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர், சட்டமன்ற கட்சித் தலைவர் மட்டுமே  கட்சியல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும், உழைப்புமே கட்சி.  பட்டியல் வெளியானதும் விரிவாகப் பேசலாம். இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது."


இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார்,  பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment