by satheesh on | 2026-03-25 08:09 PM
சமூக வலைதளங்களில் சிறுமியின் புகைப்படம் வெளியீடு - 22 வழக்குகள் பதிவு :
வேடநத்தம் படுகொலை சம்பவத்தில் சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாக சிறுமியின் விவரங்களை வெளியிட்ட நபர்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கு எதிராக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட சிறுமிகளின் புகைப்படம், பெயர் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட அடையாளங்களைச் சமூக ஊடகங்கள் அல்லது இணையதளங்களில் வெளியிடுவது இந்தியச் சட்டப்படி (POCSO மற்றும் பிற பிரிவுகள்) கடும் குற்றமாகும். இது பாதிக்கப்பட்ட சிறுமியின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கும், கண்ணியத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகும். குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடநத்தம் மாணவி கொலை வழக்கில், சிறுமியின் அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் பதிவிட்டவர்கள் மீது இதுவரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்டக் காவல்துறை இது தொடர்பாக விடுத்துள்ள எச்சரிக்கையில்: "பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிடும் நபர்கள் மற்றும் அத்தகைய பதிவுகளை அனுமதிக்கும் சமூக ஊடக நிறுவனங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்." எனத் தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
விளாத்திகுளம் சம்பவம் - சமூக வலைதளங்களில் சிறுமி புகைப்படம் வெளியீடு ! வழக்குகள் பதிவு !!
"ஜகா "வாங்கும் நிர்வாகிகள் - வேட்பாளர்களுக்கு டிமாண்ட் ! த வெ க விற்கு சிக்கலா ..?
பள்ளி வளாகத்தில் கார் மோதி சிறுமி உயிரிழந்த பயங்கரம் ! விடிய விடிய சாலை மறியல் !! போக்குவரத்து கடும் பாதிப்பு - பதற்றம் !!!
பதறிப்போன ஊழியர்கள்...!பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்...!
சாத்தான்குளம் சம்பவம் - 9 போலீசாரும் குற்றவாளிகள் என தீர்ப்பு ! உச்சபட்ச தண்டனை வழங்க கோரிக்கை !!