| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

தேர்தல் பறக்கும் படை அதிரடி...! விதிமீறல்...! ரூ.96,500 பறிமுதல்...!

by Vignesh Perumal on | 2026-03-17 02:34 PM

Share:


தேர்தல் பறக்கும் படை அதிரடி...! விதிமீறல்...! ரூ.96,500 பறிமுதல்...!

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ஒட்டன்சத்திரம் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.96,500 ரொக்கப் பணத்தைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் விதிமீறல்களைக் கண்காணிக்கப் பல இடங்களில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இன்று ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கேதையறும்பு மின்வாரிய அலுவலகம் அருகே நிலைக்கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு டெம்போ வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த வாகனத்தில் வந்த குமரேசன் என்பவரிடம் சோதனை நடத்தியபோது, அவரிடம் கட்டுக் கட்டாகப் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. 

அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவரிடம் இருந்த ரூ.96,500 ரொக்கப் பணத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அந்தப் பணத்தைப் பறக்கும் படையினர் முறைப்படி பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து குமரேசனிடம் கேட்டபோது, தான் மாடு வாங்குவதற்காகப் பணத்தைக் கொண்டு வந்ததாகத் தெரிவித்தார். இருப்பினும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாகக் கொண்டு செல்லும்போது அதற்குரிய முறையான ஆதாரங்கள் இருக்க வேண்டும் என்ற விதியின் அடிப்படையில், அந்தப் பணம் ஒட்டன்சத்திரம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என்றும், உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து விட்டுப் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் நேரம் என்பதால் பொதுமக்கள் அதிகப்படியான ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்லும்போது விழிப்புடன் இருக்குமாறு தேர்தல் ஆணையம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.











நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment