by Vignesh Perumal on | 2026-03-11 10:18 PM
சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு மார்ச் 25-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விடுதி மாணவர்களுக்கு உணவு வழங்க முடியாத சூழல் ஏற்பட்டதால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நிலவி வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத் தட்டுப்பாடு காரணமாக, பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உணவு தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் நலன் கருதி பல்கலைக்கழக நிர்வாகம் வரும் மார்ச் 25-ஆம் தேதி வரை நேரடி வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டாலும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் மார்ச் 25 வரை அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் வாயிலாக நடைபெறும்.
விடுதிகளில் தங்கியுள்ள மாணவ, மாணவிகள் உடனடியாகத் தங்களது அறைகளைக் காலி செய்துவிட்டுச் சொந்த ஊர்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எரிவாயு விநியோகம் சீரான பிறகு, மார்ச் 26-ஆம் தேதி முதல் வழக்கம்போல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வுகள் நெருங்கி வரும் வேளையில், திடீரென சிலிண்டர் தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி விடுதிகளைக் காலி செய்யச் சொன்னது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிமாநிலம் மற்றும் தொலைதூர மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் குறுகிய காலத்தில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள ஒரு பெரிய கல்வி நிறுவனம் அடிப்படைத் தேவையான எரிவாயு தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி விடுமுறை அளித்துள்ளது கல்வி வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!
தர்பூசணி சாப்பிட்ட 4 பேர் பலியான பரிதாபம் ! தீவிர விசாரணைக்கு உத்தரவு!!
வாக்கு எண்ணிக்கை ! வழிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம் !!
அதிகரிக்கும் ஐஸ்கிரீம் விற்பனை ! நிறுவனங்களில் ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு.!!
பழனியில்....! ஆண்டிபட்டி தொழிலாளி அடித்துக் கொலை...! 3 பேர் கைது...!