by satheesh on | 2026-03-09 11:02 AM
ஒரே நாளில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஐந்து நபர்கள், ஒரே நாளில் 'தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்' கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய. கோவில்பட்டியைச் சேர்ந்த அசோக் (எ) அய்யாதுரை (27) மற்றும் வேல்முருகன் (34) ஆகிய இருவர் மீதும்; ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்ட வழக்கில் தொடர்புடைய , ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த தண்டபாணி (23), மலையாண்டி (39) மற்றும் தங்கதுரை (எ) தங்கையா (22) ஆகிய மூவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்தனர். காவல் ஆய்வாளர்களின் கோரிக்கையை ஏற்று, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன், சம்பந்தப்பட்ட 5 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவருக்குப் பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில், ஐந்து நபர்களும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்டத்தின் அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் மீது இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இணை ஆசிரியர் : zN.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாட்டம் கட்டுரையாளர் ராஜசிம்மன்.....!!!
மேகமலை வன சரணாலயம் மலைவாழ் மக்கள் குறித்து CPM மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டி...???
உலக தாய்ப்பால் வார விழா பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்.....!!!
மேகமலை மலை கிராம மக்கள் தேனி கலெக்டர் அலுவலகம் முற்றுகை...!!! போராட்டம் தீவிரம்....!!!"
தேனி கலெக்டர் வைத்தியநாதன் ஆய்வு....!!!!!