by Vignesh Perumal on | 2026-03-04 02:29 PM
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளி கோவில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கில், அவர் மீது திருட்டுப் புகார் அளித்த நிகிதா இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்.
மடப்புரம் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்தார். காவல்துறையினர் தாக்கியதாலேயே அவர் உயிரிழந்ததாகக் கூறி, இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு விசாரணையானது சி.பி.ஐ. (CBI) வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், அண்மையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இது தொடர்பான விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.
அஜித்குமார் மீது நகை திருட்டுப் புகார் அளித்த நிகிதா என்பவரிடம் விசாரணை நடத்த வேண்டியதன் அவசியத்தை சி.பி.ஐ. தரப்பு வலியுறுத்தியது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், நிகிதாவை நேரில் ஆஜராகுமாறு சம்மன் (நோட்டீஸ்) அனுப்பியது.
நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நிகிதா நேரில் ஆஜரானார். அவரிடம் இந்த வழக்கு மற்றும் அவர் அளித்த புகார் தொடர்பாக நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
காவல்துறையினர் மீதான இந்தக் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நிகிதாவின் வாக்குமூலம் இந்த வழக்கில் மிக முக்கியத் திருப்புமுனையாக அமையும் எனக் கருதப்படுகிறது.
ஆசிரியர்கள் குழு....
தேனியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விலகல் ! அதிமுகவில் ஐக்கியம் !!
அடகு கடை நடத்தி 300 பவுன் அபேஸ் ! தட்டி தூக்கிய போலீஸ் !!
ஓபிஎஸ் ஆதவாளர்கள் ஆலோசனை - கூண்டோடு விலக முடிவு !
காவலாளி மரண வழக்கு..! புகார் அளித்த பெண்...! இன்று நீதிமன்றத்தில் ஆஜர்..!
அதிரடி விலை மாற்றம்..! சவரனுக்கு ரூ.2,120..! மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்..!