| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் TVK

இரட்டைக்கொலை விவகாரம்...! தவெக தலைவர் விஜய்..! கடும் கண்டனம்..!

by Vignesh Perumal on | 2026-03-03 03:00 PM

Share:


இரட்டைக்கொலை விவகாரம்...! தவெக தலைவர் விஜய்..! கடும் கண்டனம்..!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் நடந்த இரட்டைக்கொலைச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

உலக நாடுகளுடன் போட்டி போடும் வகையில் சிறப்பான ஆட்சி நடப்பதாகக் கூறிக்கொள்ளும் இந்தத் திராவிட மாடல் ஆட்சியில், சாமானிய மக்களின் உயிருக்கு எங்கே உத்தரவாதம் இருக்கிறது? என்று விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். தொடரும் கொலைச் சம்பவங்கள் சட்டம் ஒழுங்கின் தோல்வியைக் காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார்.

இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழகம் விளங்குவதாகக் கூறப்படும் நிலையில், தமிழகக் காவல் துறைக்கு முழுநேரச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே? என்று வினவியுள்ளார். பொறுப்பு அதிகாரிகளைக் கொண்டு நிர்வாகத்தை நடத்துவது குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தப் போதுமானதாக இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"மக்கள் நலனைப் பற்றித் துளியும் யோசிக்காத இந்த திமுக ஆட்சி, வரும் தேர்தலில் மக்களால் நிச்சயம் தூக்கி எறியப்படுவது உறுதி," என்று தனது அறிக்கையில் விஜய் மிகக் கடுமையான அரசியல் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கொலைச் சம்பவத்தை முன்வைத்து, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகத் தவெக தலைவர் விஜய் நேரடியாகத் தமிழக அரசைத் தாக்கிப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.














நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment