by Vignesh Perumal on | 2026-02-27 07:05 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில், போதிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் இன்றி அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திண்டுக்கல் மற்றும் குமுளியை இணைக்கும் முக்கிய வழித்தடமான இந்த தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகின்றன. இந்நிலையில், பெரியகுளம் அனுமார் கோவில் அருகே நெடுஞ்சாலைத் துறையினரால் திடீரென வேகத்தடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக அதிவேகமாகச் செல்லும் வாகனங்கள், இந்த இடத்தில் வேகத்தடை இருப்பதை அறியாமல் வரும்போது, திடீரென பிரேக் போடுவதால் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.
ஒரு வேகத்தடை அமைக்கப்படும்போது, அதற்குச் சில மீட்டர்களுக்கு முன்னதாகவே "வேகத்தடை உள்ளது" என்ற எச்சரிக்கை பலகையோ அல்லது சாலையில் ஒளிரும் பட்டைகளோ அமைக்கப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், இந்த இடத்தில்: 'எந்தவிதமான எச்சரிக்கை பலகையும் வைக்கப்படவில்லை.
இரவு நேரங்களில் தூரத்திலிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது கண்ணுக்குத் தெரிவதில்லை. இதன் காரணமாக, இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் தூக்கி வீசப்படுவதும், நான்கு சக்கர வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொள்வதும் எனச் சிறு சிறு விபத்துக்கள் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
இது குறித்து அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் கூறுகையில், "அனுமார் கோவில் அருகே விபத்துகளைத் தவிர்க்க வேகத்தடை அமைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றாலும், போதிய முன்னெச்சரிக்கை பலகைகள் இல்லாதது புதிய விபத்துகளுக்கே வழிவகுக்கிறது. குறிப்பாக வெளியூர் பயணிகள் இரவு நேரங்களில் வரும்போது பெரும் அவதிக்குள்ளாகின்றனர்" எனத் தெரிவித்தனர்.
எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் நடப்பதற்கு முன்னதாக, நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக தலையிட்டு, வேகத்தடைக்கு முன்னதாக உரிய எச்சரிக்கை பலகைகளை வைக்கவும், வேகத்தடையில் வெள்ளை நிறப் பட்டைகளை வரையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
திருமணத்தை மீறிய உறவு - விவகாரத்து கோரி விஜய்யின் மனைவி கோர்ட்டில் மனு தாக்கல் !
எச்சரிக்கை பலகை..! அமைக்கப்பட்ட வேகத்தடை..! தொடர் விபத்துகளால் வாகன ஓட்டிகள் அச்சம்..!
பெரியகுளம் அருகே தனியார் பாருக்கு அதிரடி 'சீல்'..! அதிகாரிகள் நடவடிக்கை...!
மோடி புதிய உலக சாதனை !
E- 20 பெட்ரோல் - மத்திய அரசு புதிய உத்தரவு !